13 February 2012

13 September 2011

www.aradenamusic.com/

20 July 2011

எனக்கென ஒருத்தி....

எனக்கென ஒருத்தி

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ
எனக்கெனப் பிறந்த அவளை நான் இதுவரை காணவில்லை
நான் இதுவரை காணாதவளை நான் இன்னும் தேடுகின்றேன்
எனக்கெனப் பிறந்த அழகி அவள் எங்கே இருக்கிறாளோ

மான் விழியாளோ அவள் மரகத மொழியாளோ
மான் விழியாளோ அவள் மரகத மொழியாளோ
மெல்லிடையாளோ இல்லை மேனகை போன்றவளோ அவள்
மெல்லிடையாளோ ஒரு மேனகை போன்றவளோ

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......

உன் அழகை காண்பதற்கு நான் நெற்றியில் ஓர் பொட்டு வைப்பேன்
நான் ஊரறிய உன் கழுத்தில் ஒரு மாலை ஏற்றிடுவேன் பூ மாலை ஏற்றிடுவேன்

விண்வெளியில் வீடு கட்டி நாம் வாழ்ந்து பார்ப்போமா
வெள்ளைப் புறா மீதில் ஏறி ஒரு ஊர்வலம் போவோமா
ப+விதழை விரித்து அதில் நாம் நித்திரையும் செய்வோமே
வானவில்லை எடுத்து அதை நாம் உடுத்தி திரிவோமே

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......

மல்லிகையிற் ப+த்தொடுத்து நான் உன் தலையிற் சூட்டிடுவேன்
நான் உன் முகத்தை நிதம் பார்த்து என் வாழ்வில் மகிழ்ந்திடுவேன்
என் வாழ்வை வாழ்ந்திடுவேன்

வள்ளம் ஒன்றில் மிதந்து கடல் அலையைப் பிடிப்போமா
மின்னும் வெள்ளி எடுத்து அதில் ஒரு மாலை தொடுப்போமா
வெள்ளி மாலை போட்டு நாமும் இங்கு பாடித்திரிவோமே
அந்தி வான சூரியனை நாம் தொட்டுப் பார்ப்போமே

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......

காதல் மொழியா....

காதல் மொழியா

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா
நிஜத்தின் உருவா இது நிழலின் கருவா
கண்கள் பேசுகின்ற மௌன மொழி இது
கனவில் வாழுகின்ற இன்பநிலை

இது ஒரு புதுவித உயிரின் ஏக்கம்
உணர்வுகள் உரசிடும் உறவின் தேடல்

நீயும் நானும் ஒன்று என்று வாழும் மயக்கம்

பூக்கள் மலரும் ஒலியின் இசையில் இதயம் இரண்டும் இடம்மாறும்
இமைகள் இமைக்க மறுக்கும் நொடியில் காதல் அங்கே அரங்கேறும்
நிமிடம் கூட மறக்க மறுக்கும் மனதின் எண்ணங்களே அந்த
நொடியில் தோன்றும் உயிரின் வலியை உணரும் ஸ்பரிசங்களே

இரு உயிர் உரு உடல் இது ஒரு இலக்கணம்
உறவுகள் மலர்கையில் இது ஒரு தனிரகம்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்து உயிரை வதைக்கும் மாயை

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா…………

தேடி அலைந்தால் கிடைக்காது இது தானேவந்தால் போகாது
உயிரைப் பரிசாய் கொடுக்க துணியும் உறவின் ஆழம் புரியாது
இதய நரம்பை மீட்டிப்போகும் புதிய ராகம் இது
வந்து உணர்வையெல்லாம் உரசிப்போகும் புதிய கீதம் இது

இரவுகள் கலைந்திடும் உறக்கங்கள் தொலைந்திடும்
கனவுகள் மலர்ந்திடும் கவிதைகள் பிறந்திடும்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்து உயிரை வதைக்கும் மாயை

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா…………

யாழ் நகர வீதியில்......

யாழ் நகர வீதியில்

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர் கந்தன் வீதியில் நாம் கம்பன் கழகம் பார்த்ததும்
ராஜா தியேட்டர் அரங்கிலே களவாய் சினிமா பார்த்ததும்
லேடிஸ் கொலிஜ் சுண்டுக்குழி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என் நெஞ்சில் சுற்றுதடா

சட்டநாதர் கோவிலில் அருணா கோஸ்டி பார்ப்பதும்
இளங்கலைஞர் மன்றத்தில் அரங்கேற்றம் பார்த்ததும்
சின்னமணி வில்லிசை சின்ன வயதில் பார்த்ததும்
மாவிட்டபுரம் கோவிலில் மாவிளக்குப்போட்டதும்

கீரிமலைக்கடலிலே நீச்சல் பழகப் போனதும்
கச்சான் கடை ஆச்சியோடு சண்டை பிடித்து ஓடியதும்
தட்டிவானில் ஏறி சன்னதிகோவில் போனதும்
அன்னதான மண்டபத்தில் வரிசையாக நின்றதும்
பண்டித்தளச்சி அம்மன் கோவில் பங்குனித்திங்கள் பொங்கலும்
வல்லிபுரக்கோவிலின் நாமம் அள்ளிப் பூசியதும்
நாகர் கோவில் மணல்காடு சவுக்கங்காட்டு தோப்பெல்லாம்
கப்பல் திருவிழா பார்த்தது என்நெஞ்சில் நிக்குதடா

துர்க்கை அம்மன் கோவிலில் பிரதட்டை அடித்ததும்
மாரியம்மன் கோவிலில் தீவட்டி பிடித்ததும்
சுட்டிபுரம் அம்மன் கோவில் சீர்காழி கச்சேரியும்
நயினை அம்மன் கோவிலுக்கு வள்ளத்திலே போனதும்

விக்னா ரியூசன் போனதும் சயன்ஸ் ஹோலில் படித்ததும்
நேற்றுப்போல தெரியுது இது வாழ்வில் மறக்குமா
பள்ளிக்கூடம் போகாமல் பிக்மச் பார்க்கப்போனதும்
வாத்தியாரைக் கண்டதும் கூட்டத்திலே மறைந்ததும்

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர் கந்தன் வீதியில் நாம் கம்பன் கழகம் பார்த்ததும்
கைலாசபதி கலையரங்கில் கலர்ஸ் நைட்பார்ததும்
லேடிஸ் கொலிஜ் சுண்டுக்குழி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என் நெஞ்சில் சுற்றுதடா

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்

03 June 2009

புரியாத புதிர்


புரியாத புதிர்



கானகத்து பாதையிலே
கானல் நீர் தெரியுதடி
கானகத்து மான் கூட்டம்
பாதை வழி ஓடுதடி

ஓடுகிற நீரோட்டம்
ஓர்; நிமிடம் சிரிக்குதடி
சிரித்துவிட்டு நீரோட்டம்
தன்பாதை வழி செல்லுதடி

ஓடுகிற மானினமோ
புரியாமல் ஓடுதடி
ஓரிடத்தில் புரிந்து கொண்டு
வாடாமல் வாடுதடி

நீரோட்டம் கரைசேர்ந்து
ஆற்;றோடு கலந்ததடி
ஆறோடும் திசை பார்த்து
நீரோட்டம் பாய்ந்ததடி

கானகத்து மான் கூட்டம்
கண் கலங்கிப் போனதடி
புரிய வைத்த நீரோட்டமதை
புகழ்ந்துமே பாடுதடி

26 April 2009

வா வா அன்பே....



வா வா அன்பே

உள்ளம் துடிக்குது
உள்ளுக்குள் அழுகுது
வா வா அன்பே
நெஞ்சம் துடிக்குது
நிதமும் துடிக்குது
வா வா அன்பே
கார் மேகம் விலக்கி
வானத்தில் பறப்போம்
காற்றோடு சேர்ந்தே
நிலவுக்குப் போவோம்
நிலவினில் நமக்கோர்
மண்குடிசை அமைப்போம்
வா வா அன்பே
நீயும் நானும் நிதமும்
இரவும் பகலும் சேர்ந்தே
பிரிவை மறப்போம்
துன்பத்தை தொலைப்போம்
வா வா அன்பே
வாலிபம் அழைக்குது
இன்ப வானிலே பறந்திட
இறக்கைகள் அடிக்குது
வா வா அன்பே.

22 April 2009

நல்வாழ்வு மலராதா...?



நல்வாழ்வு மலராதா?

WAR (போர்) அம்மா
இது எங்கும் ஓயாதா - இந்த
பூமி எங்கும்
பூமழை தூவாதா?

வான் நிலா
பூமிக்கு வாராதா - இங்கு
வாழ்க்கை எல்லாம்
நல்லொளி வீசாதா?

தென்றல் காற்று
மெல்ல வீசாதா – மனித
தேகம் எங்கும்
வருடிச் செல்லாதா

துன்பக் காற்று
இங்கு மறையாதா – இங்கு
துன்பம் இன்றி
வாழ்வு மலராதா?

21 April 2009

உனக்காக நான்...



உனக்காக நான்

வண்டு வந்து
தேன் குடிக்க
வண்ண இதழ்
மலர் உண்டு
தென்றல் வந்து
தொட்டு ஆட
அசைந்தாடும்
கொடி உண்டு
நிலவு வந்து
சுற்றி வர
நீல நிற
வானம் உண்டு
முகில் வந்து
முத்தமிட
அழகான
மலை உண்டு
பனி வந்து
படுத்துறங்க
பச்சை நிற
புல் உண்டு
அலை வந்து
தழுவி செல்ல
மணல் மேனி
கரை உண்டு
நீ வந்து
காதல் கொள்ள
உனக்காக
நான் இங்கு
நீ மட்டும்
ஏன் வரவில்லை?

அந்திமாலைப் பொழுது...



அந்திமாலைப் பொழுது

அருக்கன் சிவக்க
அலைகடல் இசைக்க
கொண்டல் அசையும்
கோலம் பார்த்து
தெரியல் வேளை
இரு இதயம் இடம்மாறும்
மோகத்தில் உள்ளம்
முத்தத்தில் தடுமாறும்
நெய்தல் நிலமெங்கும்
தென்றல் மெல்ல வீச
கங்குல் தோன்றும்
ஆழி கொந்தழிக்க
வெண்மதியின் வரவில்
வெண்ணுரை தோன்றும்
இணைந்திருக்கும்
ஈருடல் கண்டு
வானத்து வஞ்சிக்கொடி
நாணத்தில்
உடல் வெளுறிப் போகும்

இதயம் மறந்திடுமா...





இதயம் மறந்திடுமா

நிலவே நிலவே
போய்விடு என்றால்
அது போய்விடுமா
தென்றலே தென்றலே
வீசாதே என்றால்
அது நின்று விடுமா
மலரே மலரே
மலராதே என்றால்
அது மூடிடுமா
பனியே பனியே
சுட்டிடு என்றால்
அது சுட்டிடுமா
காதலே காதலே
போய் விடு என்றால்
அது போய் விடுமா
அன்பே அன்பே
உன்னை மறந்திடு என்றால்
என் இதயம்
உன்னை மறந்திடுமா

தயார்...



தயார்

உன்னை இழக்க
நான் தயாரில்லை
என் அன்பை இழக்க
நீ தயார் என்றால்
என்னை இழக்க
நான் தயார்

20 April 2009

சிறகுகள்...




சிறகுகள்

சிறகுகள் முளைத்தன
பறக்க துடித்தன
முடியவில்லை முடியவில்லை
பூட்டி வைத்த இதயமதை
புரியாமல் திறந்துவிட்டேன்
திறந்து வைத்த இதயமதுள்
அன்பை வைத்து பூட்டிவிட்டேன்
பூட்டி வைத்த இதயமதை
திறந்து விடமுடியவில்லை
ஓரிடத்தில் வைக்கவில்லை
ஈரிடத்தில் வைக்கவில்லை
இதயம் முழுவதிலும் வைத்துவிட்டேன்
முடியாமல் வாடுகின்றேன்
சிறகுகள் அடிக்கின்றன
பறக்கத் துடிக்கின்றன
முடியவில்லை முடியவில்லை